Sports
காமன்வெல்த் விளையாட்டு போட்டி-இந்திய அணியிலிருந்து தமிழக வீராங்கனை நீக்கம்.. வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!
2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது. 3வது முறையாக இங்கிலாந்தில் காமன்வெல்த் தொடர்கள் நடக்கவுள்ளன. இந்த தொடரில் கிரேட் பிரிட்டன் முன்னர் ஆண்ட பெரும்பாலான நாடுகள் பங்கேற்கவுள்ளன.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா அதிகம் பதக்கம் வாங்கும் விளையாட்டாக கருதப்படும் சுப்பாக்கி சுடுதல் போட்டி இந்த முறை நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பல ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் கிரிக்கெட் தொடர் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அறிமுகமாகியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்கும் 36 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவை இந்தியா அறிவித்திருந்தது. இதில் தமிழக வீரர்களை தனலட்சுமி 200 மீட்டர் தடகளம் மற்றும், ரீலே போட்டியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் தமிழக வீராங்கனை தனலட்சுமி தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து காமன்வெல்த் போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் 2022 காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டும் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யாவும் தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டதால் நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!