Sports
போட்டியின்போது நீச்சல் குளத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள் !
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற அமெரிக்கா நீச்சல் வீராங்கனை அனிதா அல்வாரெஸ் நீச்சல் குளத்தின் உள்ளே மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதைக் கண்ட சக நீச்சல் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த தருணத்தில் உடனடியாக சுதாரித்த அமெரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்காவால் ஃபுயெண்டஸ், நீச்சல் குளத்தில் குதித்து உடனடியாக நீச்சல் வீராங்கனை அனிதா அல்வாரெஸை மீட்டுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள பயிற்சியாளர் மார்காவால் ஃபுயெண்டஸ், "உயிர்காப்பாளர்கள் நீச்சல் குளத்தில் குதிக்காததால் நான் உள்ளே குதிக்க வேண்டியிருந்தது. அவள் சுவாசிக்கவில்லை என்று நான் பயந்தேன், ஆனால் இப்போது அவள் நன்றாக இருக்கிறாள். அவளுடைய நுரையீரலில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் அவள் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது மூச்சுவிடாமல் இருந்தாள் என்று நினைக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!