Sports
“என் கடைசி போட்டி சென்னையில்தான்.. ஆனால்..” : ரசிகர்களுக்கு செம அப்டேட் கொடுத்த கூல் கேப்டன் தோனி!
ஐ.பி.எல் 2021 தொடரின் வெற்றிக்கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் சி.எஸ்.கே அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சி.எஸ்.கே கேப்டன் தோனி வெற்றிக் கோப்பையை முதல்வர் மு.கஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். மேலும், முதல்வரின் பெயரும் 7 என்ற எண்ணும் பொறிக்கப்பட்ட ஜெர்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் தோனி.
பின்னர் இந்நிகழ்வில் பேசிய CSK கேப்டன் எம்.எஸ்.தோனி, “2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து சென்னை உடனான உறவு தொடங்கியது. சென்னையில்தான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன்.
சென்னையும் தமிழ்நாடும் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறது. மற்ற அணியின் வீரர்களையும் சென்னை ரசிகர்கள் உற்சாகப்படுத்துவார்கள். அதுதான் அவர்களது சிறப்பியல்பு.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக செயல்படாதபோதும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில்தான். ஆனால் அது அடுத்த ஆண்டா அல்லது 5 ஆண்டுகளுக்கு பிறகா என்று சொல்லமுடியாது.” எனப் பேசியுள்ளார்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!