Sports
“என் கடைசி போட்டி சென்னையில்தான்.. ஆனால்..” : ரசிகர்களுக்கு செம அப்டேட் கொடுத்த கூல் கேப்டன் தோனி!
ஐ.பி.எல் 2021 தொடரின் வெற்றிக்கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் சி.எஸ்.கே அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சி.எஸ்.கே கேப்டன் தோனி வெற்றிக் கோப்பையை முதல்வர் மு.கஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். மேலும், முதல்வரின் பெயரும் 7 என்ற எண்ணும் பொறிக்கப்பட்ட ஜெர்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் தோனி.
பின்னர் இந்நிகழ்வில் பேசிய CSK கேப்டன் எம்.எஸ்.தோனி, “2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து சென்னை உடனான உறவு தொடங்கியது. சென்னையில்தான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன்.
சென்னையும் தமிழ்நாடும் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறது. மற்ற அணியின் வீரர்களையும் சென்னை ரசிகர்கள் உற்சாகப்படுத்துவார்கள். அதுதான் அவர்களது சிறப்பியல்பு.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக செயல்படாதபோதும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில்தான். ஆனால் அது அடுத்த ஆண்டா அல்லது 5 ஆண்டுகளுக்கு பிறகா என்று சொல்லமுடியாது.” எனப் பேசியுள்ளார்.
Also Read
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!