Sports
#olympics - பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேற்றம்.. பதக்கத்தை உறுதி செய்தார் பி.வி.சிந்து !
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவின் பெருமையை உயர்த்தியிருந்தார் பி.வி.சிந்து. கரோலினா மரினுடன் கடைசி நொடி வரை அவர் செய்த போராட்டத்தை இன்னும் யாராலும் மறக்க முடியவில்லை.
ஆனாலும், தங்கப்பதக்கத்தை அவர் வெல்லாமல் போனது கொஞ்சம் வருத்தத்தையே கொடுத்தது. இந்த முறை டோக்கியோவில் பி.வி.சிந்து இதுவரை ஆடியிருக்கும் ஆட்டத்தை பார்க்கும்போது தங்க பதக்கத்தை வென்றுவிடுவார் போன்றே தெரிகிறது.
குறிப்பாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து இதுவரை ஆடியிருக்கும் மூன்று போட்டிகளையும் வென்றிருக்கிறார். மூன்று போட்டிகளிலும் எதிராளிக்கு ஒரு செட்டை கூட கொடுக்காமல் நேர் செட் கணக்கில் வென்று முழுமையாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒன்று நடைபெற்ற போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை யாமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு பி.வி.சிந்து தகுதிபெற்றார்.
காலிறுதியில் 21 - 13, 22- 20 என்ற செட் கணக்கில் நேர்செட்களில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் பி.வி.சிந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு... குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை... மகளிர் நீதிமன்றம் அதிரடி!
-
இவ்வளவு வசதிகளா... தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்த உயர் சிறப்பு மருத்துவமனை!
-
மகளிர் தினம் : “தமிழ்நாட்டோட இலட்சிய கனவை நீங்கதான் நிறைவேற்ற போறீங்க..” - முதலமைச்சர் சொன்ன செய்தி!
-
சீனாவிடம் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம்… இந்தியாவிற்கே வந்து மிரட்டிச் சென்ற அமெரிக்கா!
-
பெண்ணுரிமையை பறைசாற்றிய பாரதியாரைப் போற்றும் 'பாரதியார் இல்லம்' புதிய Instagram வலைதள பக்கம் தொடக்கம்!