Sports
க்ருணால் பாண்டியாவால் ஏற்பட்ட சிக்கல்... ரத்தாகிறதா இந்தியா - இலங்கை T20 கிரிக்கெட் தொடர்?
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற இருந்த நிலையில் இந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதில் இலங்கை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து முதல் டி20 ஆட்டம் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி 38 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்திய அணி வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் வீரர் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனைத்து வீரர்களுக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே அடுத்த போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!