Sports
க்ருணால் பாண்டியாவால் ஏற்பட்ட சிக்கல்... ரத்தாகிறதா இந்தியா - இலங்கை T20 கிரிக்கெட் தொடர்?
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற இருந்த நிலையில் இந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதில் இலங்கை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து முதல் டி20 ஆட்டம் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி 38 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்திய அணி வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் வீரர் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனைத்து வீரர்களுக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே அடுத்த போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!