Sports
சச்சின் தேடிய ஓட்டல் ஊழியர் இவர்தான்!
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் வாயிலாக ரசிகர்களிடம் ஒரு உதவி கேட்டு இருந்தார்.
சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரின்போது, ஹோட்டல் ஊழியர் ஒருவர் சொன்ன ஆலோசனை, தனது பேட்டிங் ஸ்டைலில் மாற்றம் தந்ததாகவும் இப்போது அவரை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என கூறி வீடியோ ஒன்றை சச்சின் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கிய ஓட்டல் ஊழியர் சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த குருபிரசாத் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கலைஞர் செய்திகள் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், ”சச்சினின் பேட்டிங்கை பார்ப்பது மிகுந்த சந்தோஷமாக இருக்கும். நான் அவரது Elbow Guard-ல் ஒரு சிறிய மாற்றம் செய்வது குறித்து அவரிடம் கூறினேன். அதற்கு அவர் அதை மாற்றிக் கொள்வதாக கூறினார். அவ்வளவு தான் வேறு எதுவும் நான் பேசவில்லை.
ஆனால், 19 ஆண்டுகளுக்கு பிறகு நான் கூறியதை சச்சின் நினைவு கூர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவரை சந்திக்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். இருப்பினும், சச்சின் எங்கள் வீட்டிற்கு வந்து விருந்து உண்டு சென்றால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்” பூரிக்கிறார் குரு பிரசாத்.
Also Read
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!