Sports
சென்னையில் நாளை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்குமா நடக்காதா? - வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் நாளை நடக்கவிருக்கும் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே அண்மையில் நடந்த T20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதற்கு அடுத்தபடியாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை (டிச.,15) சென்னையில் நடைபெறவுள்ளது.
இதற்காக, சென்னை வந்தடைந்த இரு அணி வீரர்களும் சேப்பாக்கத்தில் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் நடைபெறும் ஒருநாள் போட்டி என்பதால் இதற்கான டிக்கெட்டுகள் முழுதும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருவதால் நாளைய போட்டி நடைபெறுமா இல்லையா என்பதில் ஐயப்பாடு எழுந்துள்ளது.
இதற்கிடையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், இதனால் கிரிக்கெட் போட்டிக்கு தடை ஏற்படாது என தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், மழை பெய்தால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த ஒருநாள் ஆட்டம் தடைபடுமே என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. மழை வரவு மகிழ்ச்சியை அளித்தாலும் போட்டியின்போது வருவது கிரிக்கெட் ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!