Sports
‘இது சகோதரப் பாசம்..’ : இந்திய டாக்ஸி டிரைவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தந்த ‘இன்ப அதிர்ச்சி!’
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்கள் செய்த செயல் மற்றவர்களின் மனங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யாசிர் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா உள்ளிட்ட வீரர்கள் பிரிஸ்பேனில் உள்ள இந்திய கால் டாக்ஸி டிரைவர் ஒருவரை தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துள்ளனர். டாக்ஸி டிரைவர் வந்ததும் தங்களை ஓர் இந்திய உணவகத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர்.
அதன்படி அந்த ஓட்டுநர் அவர்களை இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். உணவகத்தில் பாகிஸ்தான் வீரர்களை இறக்கிவிட்ட டாக்ஸி டிரைவர் அவர்களிடம் கட்டணம் பெற மறுத்துள்ளார். அவர்கள் எவ்வளவோ வற்புறுத்திய அவர் கட்டணம் வாங்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து, தங்களுடன் சாப்பிட வருமாறு டிரைவரை பாகிஸ்தான் வீரர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். வீரர்கள் டிரைவருடன் உணவகத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பாகிஸ்தான் வீரர்களின் செயல்களைப் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !