Sports
இந்தியாவிற்கு 3 தங்கப் பதக்கங்களை பெற்றுத் தந்த தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்! - அசத்தல் சாதனை!
சர்வதேச ராணுவத்திற்கான விளையாட்டு போட்டிகள் சீனாவின் வூஷான் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 140 நாடுகளைச் சேர்ந்த 9,308 பேர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா தடகளப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் சார்பில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் கலந்துகொண்டார். 200 மீட்டர் தூரத்தை 24.31 விநாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். முதல் இடத்தைப் பிடித்த ஆனந்தன் குணசேகரனுக்கு தங்கபதக்கம் வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், ராணுவ விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் ஆனந்தன் குணசேகரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக கொலம்பியாவில் பஜார்டோ பார்டே போட்டிகளில் 26.11 விநாடிகள் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேபோல் பெரு நாட்டின் நடைபெற்ற காஸா ஜோஸ் போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 27.33 விநாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கம் வெற்றுள்ளார். அவரின் இந்த முயற்சிகளை பலரும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!