Sports
FIFA சிறந்த வீரர் விருதை மீண்டும் வென்ற மெஸ்ஸி... ஆறாவது முறையாகக் கைப்பற்றி அசத்தல் சாதனை!
ஃபிஃபா சிறந்த வீரருக்கான விருதை ஆறாவது முறையாக வென்று அசத்தியுள்ளார் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி.
FIFA எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தின் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதை, அர்ஜெண்ட்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி பெற்றிருக்கிறார்.
மிலன் நகரில் நடைபெற்ற விழாவில் இந்த விருதைப் பெற்றிருக்கிறார் மெஸ்ஸி. இதற்கு முன் அவர் இந்த விருதை, 2009, 2010, 2011, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி, உலகின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தேர்வு செய்யப்படுவது இது ஆறாவது முறை.
46 புள்ளிகளுடன் சிறந்த வீரருக்கான விருதைக் கைப்பற்றினார் மெஸ்ஸி. லிவர் பூல் அணியின் விர்ஜின் வேன் 38 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், யுவண்டாஸ் அணியின் ரெனால்டோ 36 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
சமீபத்தில், தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனத்தில் ஊழல் நடைபெறுகிறது என்று பேசியதற்காக மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!