Sports
வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் தோனி இடம்பெறமாட்டார் - காரணம் இதுதான்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியுடன் தோற்று வெளியேறிய போது, தோனி ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
அதைத்தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி 2 மாதம் ஓய்வில் இருந்தார். அப்போது இந்திய ராணுவத்தில் அவர் பயிற்சி பெற்றார். அதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான T20 தொடரிலும் தோனி இடம்பெறவில்லை.
இந்நிலையில், அடுத்து நடைபெறவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரிலும் தோனி இடம்பெறமாட்டார் என கூறப்படுகிறது. தோனி தன்னுடைய விடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரில் தோனி விளையாட மாட்டார். இதனால் தோனி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
Also Read
-
பா.ஜ.க கப்பலை மூழ்கடிக்கும் மக்கள் கடல் : உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் பிரச்சாரத்தில் திரண்ட மக்கள்!
-
அமித்ஷா கூட்டத்தில் காலியாக இருந்த நாற்காலிகள்... கோஷமிட்டு இடத்தை காலி செய்த பாஜகவினர்... வீடியோ வைரல்!
-
“பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டில் உள்ளது” - மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம்!
-
“திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தலாமா?” - மோடிக்கு முதலமைச்சர் கடும் கண்டனம்!
-
கல்வித்துறை முன்னேற்றத்தில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு தமிழ்நாடு... பட்டியலை வெளியிட்டு பாராட்டு!