Sports
கோலி சிறந்த கேப்டனாக இருக்க தோனி, ரோஹித் தான் காரணம் : கோலியை சீண்டும் கம்பீர்
அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் “கேப்டனாக கோலி இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டிய காலம் உள்ளது. கோலி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் இன்னும் அவர் தன்னை சிறந்த கேப்டனாக நிரூபிக்க தூரம் இருக்கிறது.
கோலி தற்போது ஒரு நாள் தொடர்களில் சிறந்த கேப்டனாக இருக்கிறார் என்றால் அவர் அணியில் ரோஹித் சர்மா, தோனி இருந்திருக்கின்றனர். உங்களுடன் ஒத்துழைக்காத வீரர்கள் அணியில் இருக்கும்போதுதான் உங்கள் தலைமைப் பண்பு கவனிக்கப்படும்.
ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் என்ன சாதித்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். இதனையும் பெங்களூரு அணிக்காக கோலி என்ன சாதித்தார் என்பதையும் ஒப்பிட்டு பாருங்கள்'' எனத் தெரிவித்தார். கம்பீர் கோலியின் கேப்டன்ஷிப்பை சாடுவது இது முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இந்தியாவில் 67% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் : வெளியான அதிர்ச்சி அறிக்கை!
-
நாடாளுமன்றத்தின் அலுவல் தொடர்பிற்கு ஏன் இந்தி மொழி ஆதிக்கம்? : துரை வைகோ எம்.பி கண்டனம்!
-
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!