Sports
ராணுவ பயிற்சி முடித்து திரும்பிய தோனி : மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெறவுள்ளதாக அறிவித்தார். இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு இந்திய ராணுவம் அனுமதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமென்டில் தோனி தனது பயிற்சியை மேற்கொண்டார். அதன்படி காஷ்மீரில் ரோந்துப்பணி உள்ளிட்ட பல்வேறு ராணுவ பணிகளில் அவர் ஈடுபடட்டார். கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கிய தோனியின் ராணுவ பயிற்சி நிறைவடைந்தது. இதையடுத்து தோனி தனது சொந்த ஊருக்குத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக பயிற்சியின் போது லடாக் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை தோனி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. தோனி ராணுவ பயிற்சி முடித்து திரும்பியதை அறிந்த தோனி ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!