Sports
ராணுவ பயிற்சி முடித்து திரும்பிய தோனி : மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெறவுள்ளதாக அறிவித்தார். இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு இந்திய ராணுவம் அனுமதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமென்டில் தோனி தனது பயிற்சியை மேற்கொண்டார். அதன்படி காஷ்மீரில் ரோந்துப்பணி உள்ளிட்ட பல்வேறு ராணுவ பணிகளில் அவர் ஈடுபடட்டார். கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கிய தோனியின் ராணுவ பயிற்சி நிறைவடைந்தது. இதையடுத்து தோனி தனது சொந்த ஊருக்குத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக பயிற்சியின் போது லடாக் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை தோனி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. தோனி ராணுவ பயிற்சி முடித்து திரும்பியதை அறிந்த தோனி ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!