Sports
ராணுவ பயிற்சி முடித்து திரும்பிய தோனி : மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெறவுள்ளதாக அறிவித்தார். இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு இந்திய ராணுவம் அனுமதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமென்டில் தோனி தனது பயிற்சியை மேற்கொண்டார். அதன்படி காஷ்மீரில் ரோந்துப்பணி உள்ளிட்ட பல்வேறு ராணுவ பணிகளில் அவர் ஈடுபடட்டார். கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கிய தோனியின் ராணுவ பயிற்சி நிறைவடைந்தது. இதையடுத்து தோனி தனது சொந்த ஊருக்குத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக பயிற்சியின் போது லடாக் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை தோனி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. தோனி ராணுவ பயிற்சி முடித்து திரும்பியதை அறிந்த தோனி ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!