Sports
ராணுவ பயிற்சி முடித்து திரும்பிய தோனி : மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெறவுள்ளதாக அறிவித்தார். இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு இந்திய ராணுவம் அனுமதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமென்டில் தோனி தனது பயிற்சியை மேற்கொண்டார். அதன்படி காஷ்மீரில் ரோந்துப்பணி உள்ளிட்ட பல்வேறு ராணுவ பணிகளில் அவர் ஈடுபடட்டார். கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கிய தோனியின் ராணுவ பயிற்சி நிறைவடைந்தது. இதையடுத்து தோனி தனது சொந்த ஊருக்குத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக பயிற்சியின் போது லடாக் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை தோனி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. தோனி ராணுவ பயிற்சி முடித்து திரும்பியதை அறிந்த தோனி ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!