Sports
ஆஷஸ் போட்டியில் சிவப்பு தொப்பிகளுடன் ஆஸ்திரேலிய - இங்கிலாந்து வீரர்கள் களமிறங்கியது ஏன் தெரியுமா?
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 71-வது ஆஷஸ் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல்நாள் ஆட்டம் தடைப்பட்டது. இரண்டாவது நாளான இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியில் எப்போதும் இல்லாத வகையில், இரு அணி வீரர்களும் சிவப்பு நிற தொப்பி அணிந்து களமிறங்கினார்கள். வீரர்கள் அணிந்திருந்த ஜெர்சியின் எண்களும் சிவப்பு நிறத்தில் இடம் பெற்றிருந்தன. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நடத்தும் அறக்கட்டளை சார்பில், நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வீரர் ஸ்ட்ராஸின் மனைவி ரூத், கடந்த ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் காலமானர். அவரது நினைவாக 'ரூத் ஸ்ட்ராஸ் அறக்கட்டளை'-யை தொடங்கினார் ஸ்ட்ராஸ். இந்த அறக்கட்டளை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அந்நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!