Sports
“அன்று நீ... இன்று நான்” : கோலியை பழிதீர்த்த நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன்!
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ஆண்டு கழித்துப் பழிதீர்த்துக் கொண்டுள்ளார்.
கடந்த 2008ல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் இளம் வீரர்களாக விராட் கோலி - கேன் வில்லியம்சன் தத்தம் அணிகளுக்கு தலைமை ஏற்று வழிநடத்தினர்.
அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 2௦5 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பேட்டிங்கின்போது மழை குறுக்கிட்டு பின்னர் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இந்திய அணி வெற்றி பெற்றது.
தற்போதைய அரையிறுதி ஆட்டத்திலும் மழை காரணமாக அடுத்த நாளுக்கு போட்டி தள்ளி வைக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது. நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கை விரட்டிய இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து, உலகக்கோப்பை அரங்கில் கேன் வில்லியம்சன், விராட் கோலியை வீழ்த்தி தனது பழைய தோல்விக்குப் பழிதீர்த்துக் கொண்டுள்ளார்.
Also Read
-
“நாடாளுமன்றத் தேர்தலின்போது மட்டும் ஆதரவைத் தேடுவதற்கு வெட்கமாக இல்லையா?” : காங்கிரசை சாடிய முரசொலி!
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!