Sports
யுவராஜ் இருக்க தோனிக்கு கேப்டன் பதவி கிடைக்க காரணம் என்ன? : கிளம்பிய புதிய சர்ச்சை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். 2011ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெருவதற்கு முக்கியமாக விளங்கியவர் யுவராஜ் சிங்.
அதன் பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமாகி வந்த யுவராஜ் சிங் இந்திய அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார். இருந்தும், நடப்பு உலகக்கோப்பை தொடரில் தான் இடம்பெற வேண்டும் என்பது யுவராஜ் சிங் நினைத்திருந்த வேளையில் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனையடுத்து, விரக்தியாகவும், அதிருப்தியாகவும் இருந்த யுவராஜ் சிங் கடந்த மாதம் தனது ஓய்வை அறிவித்தார். இதற்கு அவரது ரசிகர்கள் பலர் அவரை பாராட்டி பல பதிவுகளை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்திருந்தாலும், அணியில் இருந்து யுவராஜ் சிங் நீக்கப்பட்டதற்கு முன்னாள் கேப்டன் தோனிதான் காரணம் எனவும் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் ஆமோதித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தோனியின் 38வது பிறந்த நாள் லண்டனில் இந்திய அணி வீரர்களால் கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னாள், இன்னாள் என அனைத்து இந்திய அணி வீரர்களும் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்தனர். யுவராஜ் சிங்கை தவிர.
ஆனால், இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கு மட்டும் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு கமெண்ட்களில் தோனி ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தோனி மீது இன்னும் ஏன் உங்களுக்கு கோபம் போன்ற கேள்விகளை முன்வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்திருந்தது.
தற்போது, அதனை மிஞ்சும் வகையில் யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் மீண்டும் தோனி குறித்து சர்ச்சையாக பேசியிருக்கிறார். அதாவது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தேர்வுக்கு சரியான வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அவருக்கு பதில், பின்னர் வந்த தோனியை கேப்டனாக அறிவித்திருந்தார்கள் என யோக்ராஜ் பேசியிருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Also Read
-
"சி.பி.ஐ RSS-BJP-ன் கைப்பாவை என்று சொன்ன விஜய் இன்று அதன் கைப்பாகையாகிவிட்டார்" - முரசொலி விமர்சனம் !
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!