Sports
வீம்புக்கு பேசிய சஞ்சய் மஞ்சரேக்கரை வறுத்தெடுத்த ஜடேஜா !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகச் செயல்பட்டு வருகிறார். இவரது வர்ணனை மிக மோசமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்துடன் இந்தியா தோற்றதையடுத்து சாஹல், குல்தீப் யாதவ் இருவரும் 20 ஓவர்களில் 160 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதனையடுத்து அவரிடம் ஜடேஜாவை அணியில் கொண்டு வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “ஜடேஜா ஒரு துண்டு துணுக்கு வீரர். ரவீந்திர ஜடேஜா 50 ஒவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்த நிலையில்தான் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ப்யூர் பவுலர். ஆனால் 50 ஒவர் கிரிக்கெட்டில் என் தெரிவு என்னவெனில் ஒரு பேட்ஸ்மென் மற்றும் ஸ்பின்னர். எதிர்பாராத போட்டி முடிவுகளை வைத்து நாம் முடிவுகளை எடுக்க கூடாது, இங்கிலாந்துக்கு எதிரான போட்டி விதிவிலக்கான போட்டி அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்தார்.
ஜடேஜா ஒரு அணியில் இல்லையென்றாலும் பீல்டிங்கில் வந்து அபாரமான கேட்ச்களை எடுப்பார். அவரை அணியில் எடுக்க வேண்டும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஜடேஜாவை ‘துண்டு துணுக்கு’ வீரர் என்று கூறியதற்கு சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்துக்கு ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “நீங்கள் விளையாடியதை விட இருமடங்கு ஆட்டங்களில் நான் ஆடிவிட்டேன், இன்னும் ஆடிக்கொண்டு உள்ளேன். முதலில் சாதனையளர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ‘வெர்பல் டயரியா’ போதும்! ” இவ்வாறுத் தெரிவித்துள்ளார். ஜடேஜாவின் இந்த ட்வீட் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
ஏற்கெனவே, உலகக்கோப்பைக்கான வர்ணனையாளர் பணியில் இருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கரை நீக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கையெழுத்து இயக்கம் ஒன்று நடைப்பெற்று வருகிறது. அதில், சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்க வலியுறுத்தி இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!