Sports
உலகக்கோப்பை போட்டியில் இருந்து விஜய்சங்கர் விலகல் : அணியில் இணையும் புதிய வீரர் யார் ?
உலகக்கோப்பை போட்டியில் இருந்து இந்திய அணியில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய்சங்கர் விலகி உள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறந்த வகையில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் விஜய்சங்கர். 3 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய விஜய்சங்கர் 58 ரன்களை எடுத்துள்ளார்.
இதனையடுத்து வலை பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்கர் பந்தை எதிர்கொண்ட விஜய்சங்கருக்கு எதிர்பாராதவிதமாக கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விஜய்சங்கர் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் காலில் அடிப்பட்டதால் உலகக்கோப்பை போட்டியில் இருந்து தற்போது விஜய்சங்கர் விலகியதாக அறிவிப்பு வெளியானது.
அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஷிகர் தவானும் காயம் காரணமாக விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?