Sports
உலகக்கோப்பை போட்டியில் இருந்து விஜய்சங்கர் விலகல் : அணியில் இணையும் புதிய வீரர் யார் ?
உலகக்கோப்பை போட்டியில் இருந்து இந்திய அணியில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய்சங்கர் விலகி உள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறந்த வகையில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் விஜய்சங்கர். 3 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய விஜய்சங்கர் 58 ரன்களை எடுத்துள்ளார்.
இதனையடுத்து வலை பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்கர் பந்தை எதிர்கொண்ட விஜய்சங்கருக்கு எதிர்பாராதவிதமாக கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விஜய்சங்கர் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் காலில் அடிப்பட்டதால் உலகக்கோப்பை போட்டியில் இருந்து தற்போது விஜய்சங்கர் விலகியதாக அறிவிப்பு வெளியானது.
அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஷிகர் தவானும் காயம் காரணமாக விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!