Sports
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் சென்னையில் சாலை விபத்தில் பலி!
2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் (29) நேற்று அரும்பாக்கத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் சமீபத்தில் சென்னைக்கு வந்துள்ளார். நேற்று தனது உறவினர்களைச் சந்தித்து விட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் வழியாக இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, கலவை ஏற்றிச்சென்ற லாரியை முந்திச்செல்ல முற்பட்டபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் சக்கரத்துக்கடியில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநர் சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!