Sports
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் சென்னையில் சாலை விபத்தில் பலி!
2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் (29) நேற்று அரும்பாக்கத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் சமீபத்தில் சென்னைக்கு வந்துள்ளார். நேற்று தனது உறவினர்களைச் சந்தித்து விட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் வழியாக இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, கலவை ஏற்றிச்சென்ற லாரியை முந்திச்செல்ல முற்பட்டபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் சக்கரத்துக்கடியில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநர் சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!