Sports
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் சென்னையில் சாலை விபத்தில் பலி!
2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் (29) நேற்று அரும்பாக்கத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் சமீபத்தில் சென்னைக்கு வந்துள்ளார். நேற்று தனது உறவினர்களைச் சந்தித்து விட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் வழியாக இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, கலவை ஏற்றிச்சென்ற லாரியை முந்திச்செல்ல முற்பட்டபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் சக்கரத்துக்கடியில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநர் சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!