Sports
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீரர்!
தாய்லாந்தில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தென் கொரிய வீரர் கிம் இங்கியூவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் எளிதில் புள்ளிகளைக் குவித்து அமித் பங்கால் வெற்றிபெற்றார். அமித் பங்கால் இந்த ஆண்டின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆஷிஷ் குமார் ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை தோற்கடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் ஆண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
Also Read
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!