Sports
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீரர்!
தாய்லாந்தில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தென் கொரிய வீரர் கிம் இங்கியூவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் எளிதில் புள்ளிகளைக் குவித்து அமித் பங்கால் வெற்றிபெற்றார். அமித் பங்கால் இந்த ஆண்டின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆஷிஷ் குமார் ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை தோற்கடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் ஆண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!