Sports
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீரர்!
தாய்லாந்தில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தென் கொரிய வீரர் கிம் இங்கியூவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் எளிதில் புள்ளிகளைக் குவித்து அமித் பங்கால் வெற்றிபெற்றார். அமித் பங்கால் இந்த ஆண்டின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆஷிஷ் குமார் ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை தோற்கடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் ஆண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
Also Read
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!