Sports
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீரர்!
தாய்லாந்தில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தென் கொரிய வீரர் கிம் இங்கியூவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் எளிதில் புள்ளிகளைக் குவித்து அமித் பங்கால் வெற்றிபெற்றார். அமித் பங்கால் இந்த ஆண்டின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆஷிஷ் குமார் ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை தோற்கடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் ஆண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!