Sports
ஐ.பி.எல் இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்!
ஐ.பி.எல் 2019 தொடரின் இறுதி போட்டி மே 12-ம் தேதி நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதால், இந்த ஆண்டின் இறுதிப் போட்டி சென்னையில் நடப்பதாக இருந்தது. ஆனால், இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு அனுமதி கிடைக்காததால், இட வசதி கருதி போட்டி ஐதராபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இறுதி போட்டிக்கு மாறாக, முதல் தகுதிப் போட்டி சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தகுதிப் போட்டி மற்றும் வெளியேற்றும் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!
-
"இனி என்னிடம் ஆலோசனை கேட்காதே" - ருத்துராஜிடம் கூறிய தோனி... பத்தினாத் வெளியிட்ட தகவல் !
-
விசிக வழங்கும் விருதுகள் பட்டியல் அறிவிப்பு : நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருது !
-
73 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : ஊட்டிக்கே இந்த நிலையா ? - கொதிக்கும் கோடை வெப்பம் !