Sports
ஐ.பி.எல் இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்!
ஐ.பி.எல் 2019 தொடரின் இறுதி போட்டி மே 12-ம் தேதி நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதால், இந்த ஆண்டின் இறுதிப் போட்டி சென்னையில் நடப்பதாக இருந்தது. ஆனால், இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு அனுமதி கிடைக்காததால், இட வசதி கருதி போட்டி ஐதராபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இறுதி போட்டிக்கு மாறாக, முதல் தகுதிப் போட்டி சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தகுதிப் போட்டி மற்றும் வெளியேற்றும் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!