Sports

ஐ.பி.எல் இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்!

ஐ.பி.எல் 2019 தொடரின் இறுதி போட்டி மே 12-ம் தேதி நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதால், இந்த ஆண்டின் இறுதிப் போட்டி சென்னையில் நடப்பதாக இருந்தது. ஆனால், இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு அனுமதி கிடைக்காததால், இட வசதி கருதி போட்டி ஐதராபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இறுதி போட்டிக்கு மாறாக, முதல் தகுதிப் போட்டி சென்னையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தகுதிப் போட்டி மற்றும் வெளியேற்றும் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.