Politics
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (செப்.15) நடைபெற இருந்த தி.மு.க முப்பெரும் விழா, “நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது” என கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்தநாளையும்;
தமிழினத்தின் விடிவெள்ளியாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க நாளையும் இணைத்து கழக முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும் என்று 1985-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்.
அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஆண்டுதோறும் தி.மு.க சார்பில் முப்பெரும் விழா மிகச்சிறப்புடன் நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், வெவ்வேறு மாவட்டங்களில் நடைபெறும் இந்த முப்பெரும் விழா, நடப்பாண்டில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப்.15) நடைபெற இருந்தது.
இந்நிலையில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்.15) காலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கழக முன்னணியினர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன்,“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடும் காய்ச்சல் இருப்பதால், இந்நிகழ்வு, நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது” என அறிவித்தார்.
Also Read
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!” : மு.க.ஸ்டாலின்!
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!