Politics
“பேசினாலே கைது என்ற த.வெ.க அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்!” : உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்திருக்கும் த.வெ.க.வினர், “மாற்றத்தை தருகிறோம்... மாற்றத்தை தருகிறோம்...” என தெரிவித்து, ஜனநாயக மாண்பையே சீரழிக்கும் மாற்றத்திற்கும், மக்களுக்கான ஏமாற்றத்திற்கும் செயல் வடிவம் அளித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, த.வெ.க ஆட்சியாளர்களின் நிர்வாகத் தோல்வியையும், தவறுகளையும் சுட்டிக்காட்டும் தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க சார்பினர்களை கைது செய்து, அதிகாரத்துவப் போக்குடன் மிரட்டி வருகிறது முதலமைச்சர் விஜய்யின் கீழ் இயங்கும் காவல்துறை.
அவ்வகையில், த.வெ.க.வை விமர்சித்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைக் கண்டித்து, தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
“விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலத்தில் அடைத்து வைப்பது உட்சபட்ச அடக்குமுறை.
இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க சட்டமன்ற உறுப்பினர், கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது.
எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.
ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற - விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.
இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.
மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி.”
Also Read
-
“திமுக-வை வழக்குகளால் அழிக்க முடியாது.. எத்தனை பேரை சிறைவைக்க முடியும்” - ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!
-
FIFA 2026: மிரட்டல் ஆட்டத்தால் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்.. சொதப்பிய அர்ஜென்டினா.. எங்கு தடுமாறியது!
-
‘நாடாளுமன்றம் நோக்கிய இளைஞர்கள் பேரணி.. காவல் துறை தடியடிக்கு கண்டனம்’ : திமுக தலைமைக் கழகம்!
-
“தமிழ்நாட்டிற்கான ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்கப்போவது எப்போது?” : தயாநிதி மாறன் எம்.பி கேள்வி!
-
டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த கரப்பான் பூச்சி போராட்டம்: நாடாளுமன்றத்திற்குள் பதுங்கிய பிரதமர் மோடி!