Politics
பீகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு... - அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு !
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 6-ம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலை ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, சிபிஎம்(ML) ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரே அணியில் போட்டியிடுகின்றன. சமீபத்தில் இந்த கட்சிகள் சார்பில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
தொகுதிகள் ஒதுக்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கே இடையே சிக்கல் நீடித்த நிலையில், காங்கிரஸ் கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயங்குவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அதிகாரபூர்வமாகி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் இந்தியா கூட்டணி சார்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பல்வேறு கருத்து கணிப்புகளில் முதல்வர் வேட்பாளராக பீகார் மக்கள் தேஜஸ்வியையே தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!