Politics
பீகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு... - அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு !
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 6-ம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலை ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, சிபிஎம்(ML) ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரே அணியில் போட்டியிடுகின்றன. சமீபத்தில் இந்த கட்சிகள் சார்பில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
தொகுதிகள் ஒதுக்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கே இடையே சிக்கல் நீடித்த நிலையில், காங்கிரஸ் கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயங்குவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அதிகாரபூர்வமாகி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் இந்தியா கூட்டணி சார்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பல்வேறு கருத்து கணிப்புகளில் முதல்வர் வேட்பாளராக பீகார் மக்கள் தேஜஸ்வியையே தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பல்கலை. வேந்தர் நியமனம், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்: செல்வப்பெருந்தகை காட்டம்!
-
2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி… ஆதரவாக பேசிய தோனி! முழுவிவரம் உள்ளே!
-
நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவச் சிலை... திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் பயிற்சி... எங்கு? எப்போது?
-
மாணாக்கர்களின் கல்விக்காக... அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள்.. - அமைச்சர் கோவி.செழியன் தகவல்!