Politics
தொகுதி மறுவரையறை மாநிலங்களை பாதிக்கும் : உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!
நாடாளுமன்றத்தில் தொகுது மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பி. பி. வில்சன், மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரின் போது, உரையாற்றி இருந்தார். இதற்போது இவரது உரைக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார்.
அதில் தொகுதி மறுவரையறை மாநிலங்களை பாதிக்கும் என்பதை ஒப்புக்கொண்டார். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னரே, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் இடங்களை மறுசீரமைப்பதற்கு தொகுதி மறுவரையறை ஆணையம் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் தொகுதி மறுவரையறை ஆணையம் நிறுவப்படும், எனவே அதன் அடிப்படையை அப்போதுதான் விவாதிக்க முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் இல்லாத நிலையில் தொகுதி மறுவரையறையின் விளைவை ஊகிப்பது பொருத்தமானதாக இருக்காது.
ஒன்றிய சட்டத்துறை அமைச்சரின் இந்த பதில் தம்ழிநாடு முதலமைச்சர் அவர்கள் முன்கூட்டியே எழுப்பிய கேள்விகளை ஆதரிக்கிறது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளதால், 2026 வரை அரசியலமைப்பில் இட ஒதுக்கீட்டில் தற்போதுள்ள நிலை இயற்கையாகவே முடிவுக்கு வரும், இது தொகுதி மறுவரைக்கான சாத்தியத்திற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக, மாநிலங்களின் அரசியல் அதிகாரம் குறையும்.
Also Read
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
-
கொளத்தூர் : 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், திமுக-வுக்கு இது ‘மாநாடு மாதம்!’” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !
-
“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!