Politics
தமிழ்நாட்டின் சுங்கச்சாவடிகள் மூலம் ரூ. 18,546 கோடி வசூல் - நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் !
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி, செல்வகணபதி, காங்கிரஸ் உறுப்பினர்கள் விஷ்ணு பிரசாத், ஜோதிமணி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.
அதில் தமிழ்நாட்டில் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 31 சுங்க சாவடிகள் புதிதாக தொடங்கப் பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 1063 சுங்கச்சாவடிகள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி , தமிழ்நாட்டில் 2023-24 நிதி ஆண்டு சுங்க சாவடிகள் மூலம் 4,221 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகவும், கடந்த நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் வரையில் 2,871 கோடி வசூலிக்கப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதே போல கடந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் 18,546 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகவும் தோப்பூர் சுங்கச்சாவடி மூலம் 1124 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். அதே போல இது இந்தியாவில் உள்ள முதல் 10 சுங்கச்சாவடிகளில் ஒன்றாக உள்ளது என்றும் அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!