Politics
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
நாடாளுமன்ற அவைகள் கூடுவதும் உடனடியாக ஒத்திவைக்கப்படுவதும், ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய நடைமுறையாக மாறியுள்ளது.
பிரதமர் மோடிக்கு நெருங்கியவரான அதானி மீது கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் நாடாளுமன்றத்தில் எழும் போது அதனை புறக்கணித்து, நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைக்கும் பா.ஜ.க.வின் போக்கு, உழைக்கும் வகுப்பினர் மீதான சுரண்டல்களை ஊக்குவிக்கும் போக்காக அமைந்துள்ளது.
அவ்வகையில், இன்று (நவம்பர் 25) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய போதும், அதானியின் ஊழல் மீதான விவாதம் வேண்டும் என்றும், கேரளா மாநிலத்தின் வயநாடு நிலச்சரிவிற்கான நிவாரண நிலவரம் குறித்து விவாதம் வேண்டும் என்றும், மணிப்பூர் கலவரத்திற்கான தீர்வு எப்போது என்பது குறித்த விவாதம் தேவை என்றுமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், அது குறித்து பரிசீலிக்காமல் தனது வழக்கமான புறக்கணிப்பு நடவடிக்கைகளை தான் பா.ஜ.க கட்டவிழ்த்து விட்டுள்ளது.
அதன் விளைவாக, அதானி விவகாரம், வயநாடு நிலச்சரிவு, மணிப்பூர் கலவரம் என எது தொடர்பான விவாதமும் நடைபெறாமல் நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளையும் ஒத்திவைத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இது மக்களையும், மக்கள் நிகராளிகளையும் கடுமையான சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சிக்கல்களை புறக்கணிப்பதும், முறைகேடுகளை ஆதரிப்பதுமே பா.ஜ.க அரசின் சாதனைகளா? என்பதான கேள்விகளும் வலுக்கத்தொடங்கியுள்ளன.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!