Politics
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
நாடாளுமன்ற அவைகள் கூடுவதும் உடனடியாக ஒத்திவைக்கப்படுவதும், ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய நடைமுறையாக மாறியுள்ளது.
பிரதமர் மோடிக்கு நெருங்கியவரான அதானி மீது கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் நாடாளுமன்றத்தில் எழும் போது அதனை புறக்கணித்து, நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைக்கும் பா.ஜ.க.வின் போக்கு, உழைக்கும் வகுப்பினர் மீதான சுரண்டல்களை ஊக்குவிக்கும் போக்காக அமைந்துள்ளது.
அவ்வகையில், இன்று (நவம்பர் 25) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய போதும், அதானியின் ஊழல் மீதான விவாதம் வேண்டும் என்றும், கேரளா மாநிலத்தின் வயநாடு நிலச்சரிவிற்கான நிவாரண நிலவரம் குறித்து விவாதம் வேண்டும் என்றும், மணிப்பூர் கலவரத்திற்கான தீர்வு எப்போது என்பது குறித்த விவாதம் தேவை என்றுமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், அது குறித்து பரிசீலிக்காமல் தனது வழக்கமான புறக்கணிப்பு நடவடிக்கைகளை தான் பா.ஜ.க கட்டவிழ்த்து விட்டுள்ளது.
அதன் விளைவாக, அதானி விவகாரம், வயநாடு நிலச்சரிவு, மணிப்பூர் கலவரம் என எது தொடர்பான விவாதமும் நடைபெறாமல் நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளையும் ஒத்திவைத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இது மக்களையும், மக்கள் நிகராளிகளையும் கடுமையான சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. சிக்கல்களை புறக்கணிப்பதும், முறைகேடுகளை ஆதரிப்பதுமே பா.ஜ.க அரசின் சாதனைகளா? என்பதான கேள்விகளும் வலுக்கத்தொடங்கியுள்ளன.
Also Read
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க 5 ஆண்டு திட்டம்! : முழு முனைப்பில் தமிழ்நாடு அரசு!