Politics
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : புதுச்சேரி பாஜக MP- க்கு தொடர்பு !
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஹவாலா பண இடைத்தரகர்கள் என கூறப்பட்ட சௌகார்பேட்டை பங்கஜ் என்கிற தீபக் லால்வாணி மற்றும் சூரஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நேற்று 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதில் இந்த விவகாரத்தில் தீபக் லால்வாணிக்கு தொடர்பு இல்லை என தெரியவந்த நிலையில், சூரஜ்-க்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு கோடி ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்து கொடுத்தேன் என முதலில் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், தங்கக் கட்டிகளை விற்று சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அதோடு புதுச்சேரி எம்பி செல்வகணபதி தன்னை தொடர்பு கொண்டு 20 கிலோ தங்க கட்டிகள் இருப்பதாகவும் அதை விற்றுத் தருமாறு கூறியதாகவும் சூரஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பேரில் 15 கிலோ தங்க கட்டிகளை சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளில் விற்றுக்கொடுத்ததாகவும், மீதி நகையை அவர்கள் புதுச்சேரியிலேயே விற்பனை செய்து விட்டதாகவும் சூரஜ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுக்காக தான் தங்க கட்டிகளை விற்றுக் கொடுத்தேன் என தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி தமிழக பாஜக நிர்வாகி கோவர்தனின் டிரைவர் விக்னேஷிடமும், சூரஜ் செல்போனில் அடிக்கடி பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சூரஜூடன் தொடர்பில் இருந்த மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Also Read
-
“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!
-
“த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு என்பது கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!