Politics
"திராவிட இயக்கத்தை யாராலும் தொட்டுப் பார்க்கக் கூட முடியாது" - கழக அமைப்பு செயலாளர் RS பாரதி !
சென்னை தண்டையார்பேட்டையில் சென்னை வடக்கு மாவட்டம் ஆர் கே நகர் கிழக்கு பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் பகுதி செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் மீது மக்களுக்கு எந்த விதமான வெறுப்பும் இல்லை. மக்கள் பெண்கள் மத்தியில் தளபதி மு.க.ஸ்டாலின் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளார்
இந்தக் கட்சியை அழிப்பதற்கு பல பேர் முற்படுகிறார்கள். இந்த இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கழகத் தோழர்கள் ஒருங்கிணைந்து நின்றால் எவனும் தமிழ்நாட்டிற்குள் நுழையவே முடியாது
தமிழ்நாடு முழுவதும் செயல்பட முதலமைச்சருக்கு துணையாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துடிப்போன இளைஞராக செயல்படுவார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞருடைய வாரிசாக இயங்கி வருகிறார்
தொண்டர்கள் முகங்களை பார்த்தவுடன் புரிந்து கொள்கின்ற பக்குவம், தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொள்கின்ற பக்குவம், அரவணைத்து செய்கின்ற பக்குவம் என கலைஞரிடத்தில் என்னென்ன குணாதிசயங்கள் இருந்ததோ அனைத்தும் முழுமையாக பெற்றவராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். எனவே 50 ஆண்டு காலத்திற்கு இந்த இயக்கத்தை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.
Also Read
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!