Politics
“செந்தில் பாலாஜி வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் வேகமாக செயப்படுவார்” - இ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி !
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தில் அதன் பொது செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் அளிக்கப்பட்டது தொடர்பாக கலைஞர் செய்திகளுக்காக பேட்டி அளித்தார்.அப்போது பேசிய இ ஆர் ஈஸ்வரன் "செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் வரவேற்கத்தக்கது மகிழ்ச்சி என்றாலும், மிகவும் தாமதமாக கிடைத்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..
அமலாக்க துறையை பயமுறுத்தும் ஆயுதமாக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஜாமீன் வழங்காமல் விசாரணை கைதியாக சிறையில் வைக்கலாம் என்பதே அமலாக்க துறையின் திட்டம். ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஜாமீன் கிடைக்கப்பெற்று வருகிறது.
வழக்கு விசாரணையில் குற்றவாளியா இல்லையா என்பதற்கு முன்பாகவே கிடைக்கப்பட்ட தண்டனை தான் செந்தில் பாலாஜிக்கு கிடைத்தது. இதன் முக்கிய நோக்கம் சிறப்பாக செயல்பட்டு வரும் மனிதர்களை சிறையில் வைத்து மன உறுதியை சோதிக்கும் விதமாக அவர்கள் பாதையை திசை மாற்றுவதற்கான செயலை தான் ஒன்றிய அரசு செயல்படுத்தியது..
செந்தில் பாலாஜி திறமையாக செயல்படக்கூடியவர் மன உறுதி கொண்டவர். தற்போது பல்வேறு போராட்டத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜி வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் பலமடங்கு வேகமாக செயப்படுவார்” என்று கூறினார்.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!