Politics
“செந்தில் பாலாஜி வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் வேகமாக செயப்படுவார்” - இ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி !
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தில் அதன் பொது செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் அளிக்கப்பட்டது தொடர்பாக கலைஞர் செய்திகளுக்காக பேட்டி அளித்தார்.அப்போது பேசிய இ ஆர் ஈஸ்வரன் "செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் வரவேற்கத்தக்கது மகிழ்ச்சி என்றாலும், மிகவும் தாமதமாக கிடைத்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..
அமலாக்க துறையை பயமுறுத்தும் ஆயுதமாக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஜாமீன் வழங்காமல் விசாரணை கைதியாக சிறையில் வைக்கலாம் என்பதே அமலாக்க துறையின் திட்டம். ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஜாமீன் கிடைக்கப்பெற்று வருகிறது.
வழக்கு விசாரணையில் குற்றவாளியா இல்லையா என்பதற்கு முன்பாகவே கிடைக்கப்பட்ட தண்டனை தான் செந்தில் பாலாஜிக்கு கிடைத்தது. இதன் முக்கிய நோக்கம் சிறப்பாக செயல்பட்டு வரும் மனிதர்களை சிறையில் வைத்து மன உறுதியை சோதிக்கும் விதமாக அவர்கள் பாதையை திசை மாற்றுவதற்கான செயலை தான் ஒன்றிய அரசு செயல்படுத்தியது..
செந்தில் பாலாஜி திறமையாக செயல்படக்கூடியவர் மன உறுதி கொண்டவர். தற்போது பல்வேறு போராட்டத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜி வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் பலமடங்கு வேகமாக செயப்படுவார்” என்று கூறினார்.
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!