Politics
பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி MLA: கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு!
பாஜக ஆளாத மாநிலங்களை தவிர, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாஜக குறிவைத்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதாவது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளை ஏவி, எதிர்க்கட்சிகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரித்து வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை பாஜக குறிவைத்தது. டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிதரும் பணத்தை வைத்து தங்கள் கட்சியில் இணைக்கும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி மீதும் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தால் அவர்களுக்கு பல கோடிகளை தருவதாக பாஜக பேரம் பேசியதாக டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா பகிரங்கமாக விமர்சித்திருந்தார். அதனை உண்மை என்று நிரூபிப்பது போல ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வார் என்பவர் பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ கர்தார் சிங் தன்வாரை கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் அறிவித்துள்ளார். ஜூலை 10, 2024ம் தேதி முதல் அவரது சட்டசபை உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதாக சபாநாயகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஆசிரியர் தகுதித் தேர்வு : தி.மு.க ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானம் என்ன?
-
முதலமைச்சர் ஆனாலும், தான் ஒரு ஆடம்பர நடிகர்தான் என்பதை சொல்லிவிட்டார் விஜய்! : முரசொலி தலையங்கம்!
-
”3 ஃபைலை திறந்து பாருங்கள்.. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
-
“தவெக அரசால் பரந்தூர் விமான நிலையத்திட்டம் ரத்து.. தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்”: டி.ஆர்.பி.ராஜா காட்டம்!