Politics
நீதி எப்படி கிடைக்கும்? : தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் மோடி சென்ற விவகாரத்தில் சஞ்சய் ராவத் கேள்வி!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் சந்திரசூட். டெல்லியில் உள்ள இவரது வீட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வழிபாடு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சந்திரசூட் - பிரதமர் மோடிக்கும் இருக்கும் பந்தம் என்ன என்று கேள்வி எழுப்பி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிவசேனா தலைவர் (உத்தவ் தாக்கரே பிரிவு) நிர்வாகி சஞ்சய் ராவத், ”விநாயகர் சதுர்த்தி என்பதால், பிரதமர் மோடி, தலைமை நீதிபதியின் வீட்டிற்குச் சென்று வழிபாடு செய்திருக்கிறார். அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர், அரசியல்வாதிகளை சந்தித்தால், அது மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தும்.
மகாராஷ்டிராவில் ஒரு சட்டவிரோத அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக நாங்கள் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் நடந்து வருகிறது, எனவே இந்த வழக்கில் பிரதமர் மற்றொரு தரப்பினராக இருப்பதால் எங்களுக்கு நீதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.
எங்களுக்கு நீதி வழங்க வேண்டிய தலைமை நீதிபதிக்கும், பிரதமருக்கும் ஒரு பந்தம் இப்பதால், எங்கள் வழக்கில் இருந்து தலைமை நீதிபதி சந்திரசூட் விலக வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“திறக்கப்படாத மேட்டூர் அணையால் வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்!” : தவெக அரசுக்கு திமுக கண்டனம்!
-
“டெல்லி சென்று கழக அரசின் சாதனைகளுக்கு Sticker ஒட்டியிருக்கிறது SofaModel அரசு” : உதயநிதி ஸ்டாலின் பளார்!
-
கர்நாடகம் சென்ற விஜய் - காவிரி நீரை கொண்டு வருவாரா? : தி.மு.க கேள்வி!
-
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விஜய் எடுக்கும் நடவடிக்கையின் லட்சணம் : உண்மையை தோலுரித்த முரசொலி!
-
ஸ்ரீவைகுண்டம் விவகாரம் - யார் அந்த மேலிடம்? : முதல்வர் விஜய்க்கு, உதயநிதி ஸ்டாலின் கேள்வி!