Politics
மீண்டும் மீண்டும்... விவசாயிகள் குறித்து பாஜக எம்.பி. கங்கனா சர்ச்சை பேச்சு... குவியும் கண்டனம் !
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எதிரான பல விஷயங்களை செய்து வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என பலருக்கும் கேடு விளைவிக்கும் பல்வேறு சட்டங்களையும் இயற்றி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியது.
இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரை வைத்து போராட்டத்தை பாஜக அரசு கட்டுக்குள் கொண்டு வர முயன்றும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் இருந்து பின் வாங்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சட்டங்களை திரும்பப்பெற்றது பாஜக அரசு. இதைத்தொடர்ந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக (MSP) விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் வரும்போதும் இதனை பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது. இதனிடையே பாஜக ஆதரவாளராக இருந்த நடிகை கங்கனா, விவசாயிகளை தீவிரவாதிகள் என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். அண்மையில் பாஜகவில் இணைந்த அவர், மத்திய பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது பாஜக எம்.பி-யாக இருக்கும் கங்கனா, மக்களுக்கான கருத்தை பேசுவதை விட்டுவிட்டு, இந்திரா காந்தி, காங்கிரஸ், விவசாயிகள் உள்ளிட்டோர்களை குறித்து சர்ச்சை பேச்சுக்களை பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகள் போராட்டத்தின் போது பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இதுகுறித்து கங்கனா பேசியதாவது, “ஒன்றிய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மோடி அரசின் வலுவான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்தியாவை வங்கதேசத்தில் இப்போது நடக்கும் சூழலை போராட்டம் நடத்திய விவசாயிகள் உருவாக்கியிருப்பார்கள்.
வேளாண் சட்டங்கள் போராட்டத்தின்போது தூக்கிலிடுதலும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாட்டு சதிகள்தான் காரணம். இந்த நாடு நாய்களின் கைகளுக்கு சென்றாலும் கவலையில்லை என்றே இருக்கிறார்கள்." என்றார்.
இவரது பேச்சு தற்போது கண்டனங்களை எழுப்பி வருகிறது. விவசாயிகளை கொச்சை படுத்துவதையே வாடிக்கையாக வைத்து வரும் கங்கனா, ஏற்கனவே பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். எனினும் தற்போது எம்.பி-யாக இருக்கும்போது, தனது நாவை கட்டுப்படுத்தாமல் பேசி வருகிறார்.
விவசாயிகள் அதிகம் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், கங்கனாவின் இந்த கருத்து விவசாயிகள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!