Politics
”நாடாளுமன்றத்தில் நான் பேசினால் என் கணவருக்கு நோட்டீஸ் வருகிறது” : சுப்ரியா சுலே MP குற்றச்சாட்டு!
ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாளும் அவர்களை அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளை கொண்டு மிரட்டி வருகிறது பா.ஜ.க. மேலும் எதிர்க்கட்சி மாநிலங்களின் ஆட்சியை கவிழ்க்கும் சதி வேலைகளையும் பா.ஜ.க செய்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அரசை விமர்சித்து நான் பேசும்போதெல்லாம் தனது கணவருக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வருவதாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரியா சுலே," நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது உரையின் போது பல பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி பேசினேன். வ்வாறு பேசியதைத் தொடர்ந்து தனது கணவருக்கு, வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது ஒரு முறையல்ல. தான் நாடாளுமன்றத்தில் பேசும் போதெல்லாம் இது தொடர்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!