Politics
”நாடாளுமன்றத்தில் நான் பேசினால் என் கணவருக்கு நோட்டீஸ் வருகிறது” : சுப்ரியா சுலே MP குற்றச்சாட்டு!
ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாளும் அவர்களை அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளை கொண்டு மிரட்டி வருகிறது பா.ஜ.க. மேலும் எதிர்க்கட்சி மாநிலங்களின் ஆட்சியை கவிழ்க்கும் சதி வேலைகளையும் பா.ஜ.க செய்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அரசை விமர்சித்து நான் பேசும்போதெல்லாம் தனது கணவருக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வருவதாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரியா சுலே," நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது உரையின் போது பல பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி பேசினேன். வ்வாறு பேசியதைத் தொடர்ந்து தனது கணவருக்கு, வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது ஒரு முறையல்ல. தான் நாடாளுமன்றத்தில் பேசும் போதெல்லாம் இது தொடர்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!