Politics
”நாடாளுமன்றத்தில் நான் பேசினால் என் கணவருக்கு நோட்டீஸ் வருகிறது” : சுப்ரியா சுலே MP குற்றச்சாட்டு!
ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாளும் அவர்களை அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளை கொண்டு மிரட்டி வருகிறது பா.ஜ.க. மேலும் எதிர்க்கட்சி மாநிலங்களின் ஆட்சியை கவிழ்க்கும் சதி வேலைகளையும் பா.ஜ.க செய்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அரசை விமர்சித்து நான் பேசும்போதெல்லாம் தனது கணவருக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வருவதாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரியா சுலே," நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது உரையின் போது பல பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி பேசினேன். வ்வாறு பேசியதைத் தொடர்ந்து தனது கணவருக்கு, வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது ஒரு முறையல்ல. தான் நாடாளுமன்றத்தில் பேசும் போதெல்லாம் இது தொடர்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!