Politics
மக்களவையில் 102- ஆக உயர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை... தொடரும் சுயேச்சைகளின் ஆதரவு !
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 99 இடங்களில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவராகச் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே மஹாராஷ்டிரா மாநிலத்தின் சங்லி தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற விஷால் பிரகாஷ் பாபு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நேற்று பீகார் பூர்ணியா தொகுதியில்சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று லடாக் தொகுதியில் சுயேட்சியாக போட்டியிட்டு வென்ற ஹனிபா ஜான் காங்கிரஸில் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து விரும்பம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.
Also Read
-
நெல்லையில் ரூ.30 கோடியில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு... என்னென்ன வசதிகள்? - விவரம்!
-
4.29 லட்சம் வீடுகள்.. 25.56 லட்சம் பேருக்கு பட்டாக்கள்.. ஏழை மக்களின் கனவை நனவாக்கிய திராவிட மாடல்!
-
“நிதிஷ் குமாரின் கதியைப் பார்த்தாவது திருந்த வேண்டும்...” - பழனிசாமிக்கு முரசொலி தலையங்கம் அறிவுரை!
-
“கழக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த திருச்சி மாநாடு...” - வரலாற்று சுவடுகளோடு முதலமைச்சர் மடல்!
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!