Politics
"முதலமைச்சரின் மக்கள் நல திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது" - துரை வைகோ புகழாரம் !
முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு சென்று அடைந்ததால் இன்று தமிழ்நாடு, புதுவை உட்பட 40 தொகுதிகளில் இமாலய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் பெற்று தந்துள்ளனர் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்...."
திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் துரை வைகோவிற்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைவைகோ, "ஒரு இமாலய வெற்றியை பெற்று தந்த மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த வெற்றியால, தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தலைவர் வைகோவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு சென்று அடைந்ததால் இன்று தமிழ்நாடு, புதுவை உட்பட 40 தொகுதிகளில் இமாலய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் பெற்று தந்துள்ளனர்.என் வெற்றிக்கு பாடுபட்ட அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் ரகுபதி , அமைச்சர் மெய்யநாதன் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்த வெற்றி.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் எளியவன் துரை வைக்கோ பாடுபடுவேன். , நீண்ட காலமாக நிறைவேற்றாத மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவேன். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை"என்று கூறியுள்ளார்.
Also Read
-
”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!