Politics
பாஜகவுக்கு போட்டியாக சுயேச்சையாக போட்டி : முன்னாள் துணை முதல்வரை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக !
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், பாஜக அறிவித்த சில வேட்பாளர்கள் போட்டியிட மறுத்து விலகினர். இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.தற்போது கர்நாடகாவிலும் பாஜக கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள ஷிவமோகா மக்களவைத் தொகுதியில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திராவுக்கு சீட் வழங்கி பாஜக அறிவித்தது. ஆனால், அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுவந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவுக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுக்கவில்லை.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஈஸ்வரப்பா ஷிவமோகா தொகுதியில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார். மேலும், இது குறித்து விவாதிக்க டெல்லி சென்ற நிலையிலும் அவரை சந்திக்க அமித்ஷா மறுப்பு தெரிவித்தார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர், பாஜகவில் வாரிசு அரசியலுக்கு பாடம் புகட்டுவேன் என்று அறிவித்தார். மேலும், கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவியிலிருந்து எடியூரப்பாவின் மற்றொரு மகனான பி.ஒய்.விஜயேந்திராவை நீக்கினால் மட்டுமே ஷிவமொகாவில் போட்டியிடும் தனது முடிவை திரும்பப் பெறுவேன் என்று கூறினார்.
அவரை சமாதானப்படுத்த பாஜக மேலிடம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியைத் தழுவிய நிலையில் , ஷிவமோகா தொகுதியில் பாஜகவுக்கு போட்டியாக சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஈஸ்வரப்பாவை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா பாஜகவிலிருந்து நீக்கப்பட்டது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !