Politics
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுக்க சிறை நிர்வாகம் மறுப்பு - டெல்லி அமைச்சர் குற்றச்சாட்டு !
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனிடையே அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர். தேர்தல் நடைபெற சில நாட்களே இருக்கும் நிலையில், மாநில முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது ஜாமீனுக்காக சர்க்கரை அளவை உயர்த்த சிறையில் இனிப்பு உணவுகளை அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துக் கொள்கிறார் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியிருந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் சிறையில் உள்ள கெஜ்ரிவால் சர்க்கரை இல்லாத இனிப்புகளை 3 முறை மட்டுமே சாப்பிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுக்க சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாக ஆம் ஆத்மீ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்துப் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, "சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது, சர்க்கரையின் அளவு 300-ஐ தாண்டியிருக்கிறது. உலகில் எந்த மருத்துவரிடம் கேட்டாலும், இன்சுலின் இல்லாமல் 300-க்கு மேல் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்வார்கள்.ஆனால், சிறை நிர்வாகம் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மறுத்துவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?