Politics
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுக்க சிறை நிர்வாகம் மறுப்பு - டெல்லி அமைச்சர் குற்றச்சாட்டு !
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனிடையே அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர். தேர்தல் நடைபெற சில நாட்களே இருக்கும் நிலையில், மாநில முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது ஜாமீனுக்காக சர்க்கரை அளவை உயர்த்த சிறையில் இனிப்பு உணவுகளை அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துக் கொள்கிறார் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியிருந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் சிறையில் உள்ள கெஜ்ரிவால் சர்க்கரை இல்லாத இனிப்புகளை 3 முறை மட்டுமே சாப்பிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுக்க சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாக ஆம் ஆத்மீ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்துப் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி, "சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது, சர்க்கரையின் அளவு 300-ஐ தாண்டியிருக்கிறது. உலகில் எந்த மருத்துவரிடம் கேட்டாலும், இன்சுலின் இல்லாமல் 300-க்கு மேல் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்வார்கள்.ஆனால், சிறை நிர்வாகம் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மறுத்துவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!