Politics
உச்சபட்ச வறுமைக்கு காரணமான பா.ஜ.க! : எதிர்க்கட்சிகள் மீது சுமத்தப்படும் பொய் பழி!
கடந்த 10 ஆண்டுகளில் வறுமை, வேலைவாய்ப்பின்மை, கலவரம், சிறுபான்மையினர் உரிமை பறிப்பு ஆகியவற்றை அதிகரித்து, தோல்வியுற்ற அரசிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது பா.ஜ.க.
ஆதலால், எதிர்க்கட்சி தலைவர்கள், பொது மக்கள் என அனைவரின் கண்டனங்களுக்கும் ஆளாகி வருகின்றனர் பா.ஜ.க.வினர்.
எனினும், திசை திருப்பல்களுக்கு பெயர்போன பா.ஜ.க கட்சி, தாங்கள் உருவாக்கிய சிக்கல்களையையே, பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகின்றனர்.
அவ்வகையில், பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம், வறுமை ஆகியவை அதிகரிக்கும்” என அப்பட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில், 55 இலட்சம் கோடியாக இருந்த நாட்டின் கடன் தொகை, 150 இலட்சம் கோடி அதிகரித்து, 205 இலட்சம் கோடியாக உயர்ந்ததற்கு காரணமாக இருக்கிற பா.ஜ.க, நாட்டின் பட்டினி விகிதத்தையும் அதிகரித்துள்ளது.
மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டு, எண்ணற்ற சிறுபான்மையினர்கள் இருப்பிடங்களை விட்டு நாடோடிகளாக்கப்பட்டது அனைத்தும் கூட மோடி ஆட்சியில் நிகழ்ந்தவையே.
இவ்வாறு கலவரம், வறுமை என்ற செயல்முறையை, இந்தியாவின் அங்கமாக்கிய பா.ஜ.க, தங்களை காத்துக்கொள்ள எதிர்க்கட்சிகளின் மீது பொய்ப்பழி சுமத்தி வருவதற்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!