Politics
தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாமல் தலைமறைவான பிரதமர் மோடி : தோல்வி உறுதி என்ற உளவுத்துறை அறிக்கை காரணமா ?
பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு என எந்த நல்ல திட்டங்களையும் பாஜக கொண்டுவராததால் தேர்தலில் வெல்ல ராமர் கோவிலை பாஜக கையில் எடுத்தது.
இதற்கு ஆரம்பத்தில் வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு நிலவிய சூழலில், இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கொக்கரித்தனர். ஆனால் சமீபத்தில் வெளியான தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஊழல் பாஜகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியது.
மேலும், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரக்கூடாது என்பதற்காக அமலாக்கத்துறை, வருமானத்துறையை வைத்து எதிர்கட்சி தலைவர்களை பாஜக கைது செய்தது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்து நாடு முழுவதும் வலுவுடன் திகழ்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக ஆரம்பத்தில் ஆர்வமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கடந்த 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கே செல்லாமல் தலைமறைவாகியுள்ளார். தோல்வி உறுதி என்பதால் பாஜகவின் முக்கிய தலைவர்களும் இந்த தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமாக ஒன்றிய அரசின் உளவுத்துறை அமைப்புகள் அளித்த அறிக்கையே காரணமாக கூறப்படுகிறது. உளவுத்துறை அளித்த தகவலின் படி, நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசி வருகிறது என்றும், இதனால் தென்மாநிலங்களில் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் பாஜக தோல்வியை சனிக்கும் என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே மோடி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!