Politics
"வெறும் 2 % ஓட்டை வைத்து முதல்வரை உருவாக்க முடியாது" - பாஜகவை கிண்டல் செய்த ராகுல் காந்தி !
ஆந்திர மாநிலத்தில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அந்த மாநிலம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சந்திர சேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.
அங்கு இந்த வருடத்தோடு சட்டமன்றத்தின் ஆயுள் காலம் முடிவடையவுள்ள நிலையில், 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவுக்கு, நவம்பா் 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சி இடையே நேரடி மோதல் நிலவுகிறது.
இதன் காரணமாக அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்ச நிலையை அடைந்துள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வெளியான பல்வேறு கருத்துகணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதே நேரம் பாஜக இங்கு சொற்ப வாக்குகள் மட்டுமே பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி அமெரிக்கா சென்று அங்கு ஓபிசி வகுப்பை சேர்ந்தவரை அதிபராக்குவேன் என்று கூட கூறுவார் என்று கிண்டல் செய்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சியினர் மீது அமலாக்கத்துறை, கைது நடவடிக்கைகள் நடக்கிறது. என் மீது கூட 24 வழக்குகள் இருக்கின்றன. என்னுடைய எம்.பி பதவி பறிப்பு, அரசு வீடு பறிப்பு கூட பாஜகவால்தான் நடந்தது.
தெலங்கானாவில் பாஜகவுக்கு 2% வாக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால், அவர்கள் இங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரை பிரதமராக்குகிறோம் இரு சொல்கிறார்கள். அதிலும் பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று அங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களை அதிபராக்குவேன் என்று கூட சொல்வார்" என்று விமர்சித்துள்ளார்.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!