Politics
மோடியின் நண்பர் அதானியின் மெகா முறைகேடு.. ஒன்றிய அரசு மௌனமான நிலையில், அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் !
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.ஆனால் அதானி குழும நிறுவனத்தின் வருவாய் மட்டும் கணிசமாக உயர்ந்தது. இது எப்படி என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இரண்டு ஆண்டாக ஆய்வு செய்து இந்த குற்றச்சாட்டை நாங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. அதோடு பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நிறுவனங்களில் பங்குகள் மூன்று ஆண்டுகளில் 819% உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அதிகமான கடனை பெற்றுள்ளன. இந்த 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களில் விகிதங்கள் 1%க்கும் கீழே உள்ளது. இதனால் பணப்புழக்க அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.
அதானி குழுமம் பணமோசடி, வரி செலுத்துவோர் நிதி திருட்டு, பங்குச்சந்தை மோசடி என 17 பில்லியன் டாலர்கள் வரை மோடி செய்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 25-வது இடத்துக்கும் கீழே சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு 3.9 லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சரிவு பல நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதானியின் இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதற்கு ஒன்றிய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக நாடாளுமன்றமே ஒத்திவைக்கப்படும் நிலை கூட உருவானது. ஆனால், அத்தகைய நிலையில் கூட அதானி மீதான விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. அதிலும் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி தனது நண்பர் அதானி குறித்து ஒரு இடத்தில் கூட வாய்திறக்கவில்லை.
இதனிடையே வழக்கறிஞர் விஷாஸ் திவாரி, எம்எல் ஷர்மாஆகியோர் அதானியின் இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் 'இந்திய முதலீட்டாளர்களின் நலனை பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ளோம்.குறைந்த விலைக்கு முன்பேரத்தில் பங்குகளை வாங்குவது சிறிய அளவில் நடைபெறும் போது பிரச்சனை இல்லை.பெரிய அளவில் முன்பேர வர்த்தகம் நடைபெற்று பல லட்சம் கோடி பணத்தை முதலீட்டாளர்கள் இழக்க நேர்ந்தால் என்ன செய்வது?.
எதிர்காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க என்ன ஏற்பாட்டை செய்யலாம்?.இன்று முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல்தடுப்பது எப்படி ? இதனால் அதானி விவகாரம் குறித்து , இந்திய பங்கு சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பானது திங்கள் கிழமை பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!