Politics
“இது எங்க கொண்டு போய் நிறுத்தபோதோ?” - ரோட்டு கடையில் டீ போட்டு கொடுத்த மேற்கு வங்க MP வீடியோ பதிவு !
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது மக்களவை உறுப்பினராக இருப்பவர் மஹுவா மொய்த்ரா.
தொகுதி மக்களை அவ்வப்போது சந்தித்து வரும் இவர், விரைவில் அங்கு உள்ளாட்சி தேர்தல் வருவதால் தனது தொகுதி மக்களை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலுக்காக திரிணாமுல் காங்கிரஸ் 60 நாள்களில் 10 கோடி மக்களை சந்திக்கும் புதிய பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில் இப்பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மஹுவா மொய்த்ரா கடந்த 3 நாட்களுக்கு முன்னரும் சந்தித்து வந்தார். அப்போது அங்கே சாலையோரத்தில் இருக்கும் டீ கடைக்கு சென்றார். பின்னர் அங்கே தானே டீ போடுவதாக கூறி, அடுப்பில் இருக்கும் கொதிக்கும் பாலில், டீ தூள், வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவையை போட்டு டீ போட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அவர், “என் கையால டீ போடுறேன்.. இது எங்க கொண்டு போய் நிறுத்தபோதோ?” என்று கேளிக்கையாக பதிவையும் போட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறும் கமெண்டுகளை பெற்று வருகிறது
முன்னதாக பிரதமர் மோடியும் ஆரம்பத்தில் ஒரு டீ வியாபாரியாக இருந்தவர். பின்னர் முதலமைச்சராக இருந்து தற்போது 2 முறை பிரதமர் ஆகியுள்ளார். எனவே அதனை மறைமுகமாக குறிப்பிட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி எப்போதும் தன்னை ஒரு சாய்வாலா (டீக்கடைக்காரர்) என்று சொல்வதுண்டு. எனவே 'நாட்டிற்கு ஒரு சாய்வாலா போதும். இன்னொரு சாய்வாலாவை இந்த நாடு தாங்குமா என்று தெரியாது' என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!