Politics
ஒவ்வொன்றுக்கும் அனுமதி கேட்க வேண்டி இருக்கு: ஆளுநர்,ஒன்றிய அமைச்சர் முன் ஆதங்கப்பட்ட புதுச்சேரி முதல்வர்!
ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சுதேஷ் தர்ஷன் நிதியின் கீழ் புதுச்சேரியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளங்களின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஒன்றிய இணையமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, " நான் முதல்வராக பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டாகிறது. புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் நிர்வாக சிக்கல்களால் முடியவில்லை.
ஒவ்வொன்றுக்கும் ஒன்றிய அரசிடம் ஒப்புதல் வாங்க ஏற்படும் தாமதத்தால் பல திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில முடிவுகளை எடுக்கத் தடைகள் ஏற்பட்டு வருவதால் வளர்ச்சி, வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைத்ததில் இருந்தே பா.ஜ.கவினர் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அதேபோல், அரசின் திட்டங்களில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தலையீடு அதிகமாக இருப்பதால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகிறது என தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இந்நிலையில், முதல்வர் ரங்கசாமியே ஒன்றிய அரசிடம் ஒவ்வொரு திட்டத்திற்கும் அனுமதி கேட்க வேண்டி இருக்கிறது என பேசியுள்ளது, துணைநிலை ஆளுநரின் தலையீட்டை வெளிப்படையாகக் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!