Politics
கல்வியையும், சுகாதாரத்தையும் இரு கண்களாக பார்க்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் பொன்முடி பாராட்டு!
கோவை இராமநாதபுரத்தில் உள்ள ஜெம் மருத்துவமனையில் இலவச லேபராஸ்கோபி புற்றுநோய் அறுவை சிகிச்சை முகாம் மற்றும் பயிற்சி முகாமை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி துவக்கி வைத்தார். ஜெம் மருத்துவமனையும், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் இணைந்து ஒருநாள் இலவச லேபராஸ்கோபி புற்றுநோய் அறுவை சிகிச்சை முகாமை நடத்தியது.
இந்த முகாமை துவக்கி வைத்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், “கல்வியையும், சுகாதாரத்தையும் இரு கண்களால் பார்ப்பவர் தமிழக முதல்வர். அதுதான் திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி என்பது குறிப்பாக அடிதளத்தளத்தில் இருக்கின்ற எல்லா மக்களுக்கும், கல்வியாக இருந்தாலும் சரி, சுகாதாரமாக இருந்தாலும் சரி எல்லாமே கிடைக்க வேண்டும் என்பது தான்.
கலைஞர் ஆட்சியின்போது காப்பீட்டுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தான் இப்போது இதுபோன்ற இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றது. படித்தவர்கள் கூட இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுவதை காண முடிகின்றது. எனவே, சரியான விழிப்புணர்வை மருத்துவர்கள் ஏற்படுத்த வேண்டும்.
புற்றுநோயை குணப்படுத்த அதிநவீன சிகிச்சைகள் தற்போது வந்துவிட்டது. கல்வியாக இருந்தாலும், மருத்துவமாக இருந்தாலும், நாம் படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் மருத்துவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இரக்கமற்ற பிரஜ்வால் ரேவண்ணா : ஓட்டம் பிடிக்க உதவிய பா.ஜ.க!
-
முறைகேடுக்கு வழிவகுக்கும் தேர்தல் ஆணையம்! :எச்சரிக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சிகள்!
-
கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம் : முன்னாள் பேரா.நிர்மலா தேவிக்கு சிறை தண்டனை அறிவிப்பு - விவரம் என்ன?
-
“தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது ஏன்?” : பதிலளிக்க ED-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
“Covishield தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படும்” - மருந்து நிறுவனத்தின் அறிவிப்பால் ஷாக் - பின்னணி என்ன?