Politics
கல்வியையும், சுகாதாரத்தையும் இரு கண்களாக பார்க்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் பொன்முடி பாராட்டு!
கோவை இராமநாதபுரத்தில் உள்ள ஜெம் மருத்துவமனையில் இலவச லேபராஸ்கோபி புற்றுநோய் அறுவை சிகிச்சை முகாம் மற்றும் பயிற்சி முகாமை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி துவக்கி வைத்தார். ஜெம் மருத்துவமனையும், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் இணைந்து ஒருநாள் இலவச லேபராஸ்கோபி புற்றுநோய் அறுவை சிகிச்சை முகாமை நடத்தியது.
இந்த முகாமை துவக்கி வைத்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், “கல்வியையும், சுகாதாரத்தையும் இரு கண்களால் பார்ப்பவர் தமிழக முதல்வர். அதுதான் திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி என்பது குறிப்பாக அடிதளத்தளத்தில் இருக்கின்ற எல்லா மக்களுக்கும், கல்வியாக இருந்தாலும் சரி, சுகாதாரமாக இருந்தாலும் சரி எல்லாமே கிடைக்க வேண்டும் என்பது தான்.
கலைஞர் ஆட்சியின்போது காப்பீட்டுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தான் இப்போது இதுபோன்ற இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றது. படித்தவர்கள் கூட இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுவதை காண முடிகின்றது. எனவே, சரியான விழிப்புணர்வை மருத்துவர்கள் ஏற்படுத்த வேண்டும்.
புற்றுநோயை குணப்படுத்த அதிநவீன சிகிச்சைகள் தற்போது வந்துவிட்டது. கல்வியாக இருந்தாலும், மருத்துவமாக இருந்தாலும், நாம் படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் மருத்துவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!