Politics
“இந்தி திணிப்பை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்” : திண்டுக்கல் ஐ.லியோனி வலியுறுத்தல்!
சேலத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சாளர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்பில் உரையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் நான்காவது நாளான இன்று புத்தக திருவிழா வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் எழுத்தாளர் பவா செல்லத்துரை கலந்து கொண்டு, கதையின் உயிர் மனிதனே என்ற தலைப்பிலும், தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு கதை கேட்டு வளர்ந்தேன் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
அவர் பேசும் போது, “பழங்கால கதைகளும், உதாரணங்களும் அவரவர் மொழியில் இருந்தால் மட்டுமே நன்று என்றும் ஆனால் தற்போது மொழி திணிப்பு என்பது நம்மை எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனையாக உள்ளது. இந்தி மொழியை படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் இந்தியை திணிப்பை தான் எதிர்க்கிறோம். இந்தி திணிப்பை எதிர்க்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் சேலம் பால்பண்ணை பொது மேலாளர் விஜயபாபு, சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Also Read
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!