Politics
“இந்தி திணிப்பை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்” : திண்டுக்கல் ஐ.லியோனி வலியுறுத்தல்!
சேலத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சாளர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்பில் உரையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் நான்காவது நாளான இன்று புத்தக திருவிழா வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் எழுத்தாளர் பவா செல்லத்துரை கலந்து கொண்டு, கதையின் உயிர் மனிதனே என்ற தலைப்பிலும், தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு கதை கேட்டு வளர்ந்தேன் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
அவர் பேசும் போது, “பழங்கால கதைகளும், உதாரணங்களும் அவரவர் மொழியில் இருந்தால் மட்டுமே நன்று என்றும் ஆனால் தற்போது மொழி திணிப்பு என்பது நம்மை எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனையாக உள்ளது. இந்தி மொழியை படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் இந்தியை திணிப்பை தான் எதிர்க்கிறோம். இந்தி திணிப்பை எதிர்க்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் சேலம் பால்பண்ணை பொது மேலாளர் விஜயபாபு, சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Also Read
-
சிவகங்கை இளைஞர்களுக்கு ஜாக்பாட்! மினி டைடல் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர்: முழுவிவரம் உள்ளே!
-
ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கையை மோடியும், ஆர்.என்.ரவியும் படிக்க வேண்டும் ; முதலமைச்சர் அட்வைஸ்!
-
ரூ.61.79 கோடியில் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.13.36 கோடியில் 28 புதிய திட்டங்கள் : 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
-
யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம்! மௌனம் காக்கும் ஒன்றிய அரசு!