Politics
"மீண்டும் மொழிப்போர் வந்துவிடக்கூடாது என்பதால் தான் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்" -கனிமொழி MP பேட்டி
கோவை தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க துணைப்பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிற மொழியை கற்க வலியுறுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மொழி என்பது நம்முடைய அடையாளம்; நம்மை பற்றியும், நம் வரலாற்றை பற்றியும் தெரிந்துக்கொள்ள அது உதவுகிறது. இது நம்முடைய தகவல் தொடர்பிற்கான மொழி மட்டுமல்ல; இது நமது அடையாளம், சுயமரியாதை. தமிழகத்தில் மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார்.
தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல் தான் தமிழகத்தில் உள்ளது. உலகத்தை தொடர்புகொள்ள ஆங்கிலம்; நம்முடன் பேசுவதற்கு தமிழ் இருக்கிறது. மொழிப் போர் குறித்து ஒரு கதவு போதுமானது என அறிஞர் அண்ணா அன்றே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைபாடு.
இந்தியாவை பொறுத்தவரை schedule 8-ல் மொழிகள் எல்லாம் இணையாக, ஒரே நிலையில் பார்க்க வேண்டும். சில மொழிகளை, அலுவல் மொழிகளாக கொண்டு வர நினைக்கிறார்கள். ஆனால் அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய முதல்வர் மட்டுமின்றி, மற்ற மாநில முதல்வர்கள் கூட எதிர்வினை ஆற்றி உள்ளார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!