Politics
"மீண்டும் மொழிப்போர் வந்துவிடக்கூடாது என்பதால் தான் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்" -கனிமொழி MP பேட்டி
கோவை தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க துணைப்பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிற மொழியை கற்க வலியுறுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மொழி என்பது நம்முடைய அடையாளம்; நம்மை பற்றியும், நம் வரலாற்றை பற்றியும் தெரிந்துக்கொள்ள அது உதவுகிறது. இது நம்முடைய தகவல் தொடர்பிற்கான மொழி மட்டுமல்ல; இது நமது அடையாளம், சுயமரியாதை. தமிழகத்தில் மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார்.
தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல் தான் தமிழகத்தில் உள்ளது. உலகத்தை தொடர்புகொள்ள ஆங்கிலம்; நம்முடன் பேசுவதற்கு தமிழ் இருக்கிறது. மொழிப் போர் குறித்து ஒரு கதவு போதுமானது என அறிஞர் அண்ணா அன்றே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைபாடு.
இந்தியாவை பொறுத்தவரை schedule 8-ல் மொழிகள் எல்லாம் இணையாக, ஒரே நிலையில் பார்க்க வேண்டும். சில மொழிகளை, அலுவல் மொழிகளாக கொண்டு வர நினைக்கிறார்கள். ஆனால் அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய முதல்வர் மட்டுமின்றி, மற்ற மாநில முதல்வர்கள் கூட எதிர்வினை ஆற்றி உள்ளார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !