Politics
முன்னேற்றத்தின் அடையாளமாக திகழும் தமிழ்நாடு ! நாப்கின் பயன்பாட்டில் இந்தியாவிலேயே சாதனை !
பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய். அந்த தருணத்தில் ஏற்படும் வலி பெண்களுக்கு அசவுகரியத்தையே தரும். மேலும், பண்பாட்டு ரீதியாக அந்த தருணத்தில் பெண்கள் தனியே வைக்கப்படுவதால் மனரீதியான துயரத்தையே பெண்கள் சந்திக்கின்றனர்.
மாதவிடாய் தருணங்களில் நாப்கினுக்கு பதில் துணியையே இன்னும் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். துணிகளை பயன்படுத்துவதால் பிறப்புறுப்பில் தொற்று ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் உதவியால் நாப்கின் பயன்பாடு சமீப காலமாக பெண்களிடையே அதிகரித்து வருகிறது. நாப்கின் ஆரம்ப கட்டத்தில் அதை வைத்திருப்பதே ஆபாசமாக பார்க்கப்பட்டு வந்ததும் தற்போது குறைந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் நாப்கின் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. Stats of India வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மாதவிடாய் காலங்களில் துணியை பயன்படுத்தும் பெண்கள் மிகவும் குறைவாக இருப்பது தமிழ்நாட்டில்தான் என்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சுகாதாரமான நாப்கினையே பயன்படுத்துவது இந்த அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.அதேநேரம் வடஇந்தியாவில் அதிலும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் இன்றும் அதிகமாக மாதவிடாய் காலங்களில் துணிகளையே பயன்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!