Politics
தேர்தல் முடிவுகள் எதிரொலி.. 5 மாநில தலைவர்கள் பதவி விலக உத்தரவு- காங்கிரஸில் இன்னும் அதிரடி காத்திருக்கு!
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.க-வும் வெற்றிபெற்றன.
காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட வெற்றிபெறவில்லை. சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் நடைபெற்று முடிந்த 5 மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கட்சியில் மறு சீரமைப்பு செய்வதற்காக 5 மாநில காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்ய சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி உத்தரவையடுத்து உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கணேஷ் கோடியல். தொடர்ந்து மற்ற மாநிலங்களின் காங். தலைவர்களும் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதை கருத்தில்கொண்டு காங்கிரஸில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக காங். வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!