Politics
நீடிக்கும் கொடநாடு மர்மம்: தோண்ட தோண்ட அவிழும் முடிச்சுகள்; கொலை கொள்ளைக்கு மூளையாக இருந்த இருவர் கைது!
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் மூலையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி தனிப்படை போலிசார் கைது செய்தனர்.
அவரது நண்பர் சேலம் ஆத்துரை சேர்ந்த ரமேஷ் என்பவரும் கைது கைது செய்யபட்ட நிலையில் இருவரையும் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டனர்.
அவர்கள் இருவரையும் 08-11-21 வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி சஞ்ஜை பாபா உத்தரவிட்டார். அதனையடுத்து இருவரும் கூடலூர் கிளை சிறைக்கு அழைத்து செல்லபட்டனர்.
கொநாடு கொள்ளை சம்பவம் நடைபெறும் முன்பே தனபால் மற்றும் ரமேசுக்கு தகவல் தெரிந்தும் காவல் துறையினரின் விசாரணையின் போது மறைத்து உள்ளனர்.
இதனால் தான் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!